பழனி மலை கோவில் மின் இழுவை ரயில் இன்று முதல் இயக்கம்!

 

பழனி மலை கோவில் மின் இழுவை ரயில் இன்று முதல் இயக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, புகழ்வாய்ந்த கோவில்கள் அனைத்தும் பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அந்த வகையில் பழனி முருகன் கோவிலும் திறக்கப்பட்ட நிலையில், மலைக்கு செல்ல பயன்படுத்தப்படும் மின் இழுவை ரயில் இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

பழனி மலை கோவில் மின் இழுவை ரயில் இன்று முதல் இயக்கம்!

இதனால் மக்கள் படிகளில் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் நிலவியது. இது மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகுந்த சிரமத்தை அளித்ததால், இழுவை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், கோரிக்கையை ஏற்ற பழனி கோவில் நிர்வாகம் 50% இருக்கைகளுடன் ரயிலை இயக்க அனுமதி வழங்கியது. அதன் படி, மின் இழுவை ரயில் இன்று முதல் சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.