தேர்தல் நடக்காமல் போகலாம்! பிரபல ஜோதிடரின் கருத்து….

 

தேர்தல் நடக்காமல் போகலாம்! பிரபல ஜோதிடரின் கருத்து….

தேர்தல் கருத்து கணிப்பு குறித்து பிரபல ஜோசியர்களில் ஒருவரான ஈரோடு சதீஷ் குமாரிடம் கேட்டப்போது, “ஜோதிடம் பொதுவானது. நடுநிலையாக நாம சொல்றதா நினைத்து சொன்னாலும் அது தவறான பார்வைதான் உண்டாக்கும்.பொதுவான கருத்து வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் இல்லாமல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ஜாதகம், கருணாநிதி ஜாதகம் இணையத்தில் சுலபமாக கிடைக்கும். அதை ஆராய்ந்து நாம் கருத்தை சொல்லலாம் ஆனால் இப்போது ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஜாதகங்களின் உண்மையான காப்பி இல்லை. இணையத்தில் இருப்பவை அனைத்தும் நம்பகம் இல்லை. அதை வைத்து கணிப்பது தவறாகி விடும்.

தேர்தல் நடக்காமல் போகலாம்! பிரபல ஜோதிடரின் கருத்து….

கோட்சார நிலை என்ன சொல்கிறது ..? என்பதை மட்டும் சொல்லலாம். ஆளுங்கட்சியை குறிக்கும் கிரகங்களில் முக்கியமானது சூரியன்.தேர்தல் நடக்கும் பங்குனி மாதம் சூரியன் மீனத்தில், அதாவது கடைசி ராசியில் இருக்கிறார் சனி பார்வையும் இருக்கிறது. செவ்வாய் ராகு சேர்க்கை. இவை எல்லாம் ஆளுங்கட்சிக்கும் மத்திய அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் சவாலான விஷயங்கள். அதாவது தொற்று நோய், போர் உண்டாகும் சூழல் என்பன போன்ற மக்களுக்கு ஆபத்தை தரும் கிரக அமைப்புதான் செவ்வாய் ராகு சேர்க்கை .

ராணுவத்துக்கும், காவல்துறைக்கும் அதிக வேலை பளு கொடுக்கும் காலம்.தேர்தல் முறைப்படி நடக்குமா?, தேர்தலை மக்கள் சந்திப்பார்களா? தேர்தலை தள்ளி வைக்கும் சூழல் வருமா? என்ற கேள்விகள் தான் கோட்சாரத்தை பார்க்கும் போது தோன்றுகிறது” எனக் கூறினார்.