ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! 6 மணி வரை கெடு

 

ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! 6 மணி வரை கெடு

முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு பூதாகரமானது. இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கொந்தளித்த அதிமுகவினர் ராசாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆ. ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார். இச்சூழலில் நேற்று காலை ராசா, சர்ச்சைக்குரிய பேச்சுக்காக மன்னிப்பு கோருவதாகக் கூறினார்.

ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! 6 மணி வரை கெடு

இந்நிலையில் முதல்வர் பற்றிய ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நாளை மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் அளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.