திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்!

 

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த, தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட அருங்காட்சிய வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான கலைஞர்கள் இணைந்து, நமது அன்றாட வாழ்வில் பயன்படும் கோரை பாய்கள், நாமக்கட்டிகள், அப்பளம் முதலியவற்றினால் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடைய பொருட்களை காட்சி படுத்தி இருந்தனர்.

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்!

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகழ்பெற்ற மொடையூர் கல்சிற்பங்கள் மற்றும் விழிப்புணர்வு சிற்பங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

பின்னர், சிற்ப கலைஞர்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி நினைவு பரிசினையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.