தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 -22 ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று 7:45 மணிக்கு சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

2020 -22 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தலில் வாக்களிக்க வரும் நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள போட்டோ அடையாள அட்டை மற்றும் 2020 -22 ஆண்டுக்கான தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தனி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இறுதி வேட்பாளர்களாக தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர், ராமசாமி, தேனப்பன் உள்ளிட்டோரும், கதிரேசன், மதியழகன், முருகன்,செல்வகுமார், சிங்கார வடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

அதைப்போல் கௌரவ செயலாளர் பதவியில் கலைப்புலி சேகரன், கோட்டபாடி ஜே. ராஜேஷ், மன்னன் ,ராதாகிருஷ்ணன் ,சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ,ராஜன், சதீஷ்குமார் ஜெ ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அதேபோல் செயற்குழு உறுப்பினர் பதவியில் ஆதி வெங்கடாசலம் ,அமல்ராஜ் ,அமீர்ஜான் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.