கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

 

கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

கோவை

கோவை மாவட்டம் காரமடை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (60). விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் அங்குள்ள வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை காட்டுயானை, அவரை துரத்திச்சென்று தாக்கியது.

கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

இதில் படுகாயமடைந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அந்தபகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் பில்லூர் அணை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.