சாலை விபத்தில் முதியவர் பலி – போலீசார் விசாரணை

 

சாலை விபத்தில் முதியவர் பலி – போலீசார் விசாரணை

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்துசென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடந்துசென்றார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக சென்ற வாகனம் ஒன்று முதியவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் முதியவர் பலி – போலீசார் விசாரணை

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.