இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், முதியவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், முதியவர் பலி!

நெல்லை

பணகுடி அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த களக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி (63). இவர் நேற்று பணகுடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ரோஸ்மியாபுரம் பகுதியில் சென்றபோது, கந்தசாமியின் வாகனத்தின் மீது எதிரே வந்த மினிவேன் அதிவேகமாக மோதியது.

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், முதியவர் பலி!

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பணகுடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் பேரில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மினிவேன் ஒட்டுநரை கைதுசெய்தனர்.