விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி!

 

விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சாலைய கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மண்ணாங்கட்டி (60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விளைந்த பயிர்களை விற்பனை செய்வதற்காக, நேற்று விக்கிரவாண்டியில் உள்ள விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி!

இந்த நிலையில், விக்கிரவாண்டி கடைவீதி செல்வதற்காக விற்பனை நிலையத்தில் இருந்து புறவழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.