கோபி அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

 

கோபி அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

கோபிச்செட்டிப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக, காட்டு யானை தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பலர் யானை தாக்கி உயிரிழந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருக்கும் கணக்கம்பாளையம் சன்னக்காடு வனப்பகுதியில் சுண்டக்காய் பறிப்பதற்காக முதியவர் ராமன் சென்றிருக்கிறார்.

கோபி அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

அப்போது அங்கிருந்து காட்டு யானை, அவரை தூக்கி வீசியிருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த முதியவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யானை தாக்குதலில் இருந்து மக்களை காக்க, வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.