ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி!
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செஞ்சோன் பிள்ளை (70). விவசாய கூலி தொழிலாளி. இவர் இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார்.
குளத்தில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர், திடீரென நீரில் மூழ்கினார்.இதனை கண்ட அந்த பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் இறங்கி தேடியபோது, செஞ்சோன் பிள்ளை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தட்டப்பாறை போலீசார் சடலதை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.