வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் பலி!!

 

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் பலி!!

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற 62 வயது முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் பலி!!

தமிழக சட்டசபைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் பலி!!

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி அய்யம்பேட்டையில் வாக்கு பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது அங்குள்ள தனியார் அமைந்த வாக்குச்சாவடிக்கு அர்ஜுனன் என்ற 62 வயது முதியவர் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றார். நீண்ட நேரம் நின்றிருந்த அவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்ட காவல்துறையினர் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். நெஞ்சுவலி மற்றும் குறைந்த ரத்தஅழுத்தம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.