கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் மரணம்? வெளியாகும் பரபரப்பு தகவல்!

 

கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் மரணம்? வெளியாகும் பரபரப்பு தகவல்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கு கடந்த 24 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 3 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.

கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் மரணம்? வெளியாகும் பரபரப்பு தகவல்!

இந்த நிலையில் முதியவர் பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா இருக்கும் போதே 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாலும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் பாலச்சந்தர் கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.