கொரோனா அச்சத்தால் முதியவர் தீக்குளித்து தற்கொலை!

 

கொரோனா அச்சத்தால் முதியவர் தீக்குளித்து தற்கொலை!

விருதுநகர்

ராஜாபாளையத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக 95 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமர் (95). மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், ராமருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமர், தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்.

கொரோனா அச்சத்தால் முதியவர் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உறவினர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்கும்படி கூறி உள்ளனர். மீண்டும் கொரோனா சிகிச்சைக்கு செல்ல விரும்பாத ராமர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். சம்பவத்தன்று அவர் வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டுசென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.