கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை!

 

கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை!

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மீதான அச்சம், தனிமையில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சிலர் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்து வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 7,14,235 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன்படி அங்கு மொத்த பாதிப்பு 18,564 ஆக உயர்ந்துள்ளது.