திருப்பூர் அருகே நில தகராறில் முதியவர் அடித்துக் கொலை!

 

திருப்பூர் அருகே நில தகராறில் முதியவர் அடித்துக் கொலை!

திருப்பூர்

திருப்பூர் அருகே நிலத் தகராறில் முதியவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ராமியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (78). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து ராசு என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

திருப்பூர் அருகே நில தகராறில் முதியவர் அடித்துக் கொலை!

அப்போது, மதுபோதையில் இருந்த ராசுவின் மகன் சந்தோஷ்(25), உருட்டுக்கட்டையால் முதியவர் வெங்கடாசலத்தை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சேவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர். நிலத்தகராறில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.