8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது

 

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது

சேலம்

ஆத்தூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(72). ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அதிகாரி அதிகாரியான இவர், அதேபகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி கடைக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை, அவர் கடைக்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை பெற்றோரிடம் தெரிவித்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது

அப்போது மருத்துவரிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமையை சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.