தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 

தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

தருமபுரி

தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (80). விவசாயி. இவரது மனைவி கோசலை(70). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், துரைசாமி தனக்கு சொந்தமான நிலத்தை, சமீபத்தில் மகன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

இதனையறிந்த அவரது மகள்கள் இருவரும், சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் துரைசாமியும், கோசலையும் மன வேதனையில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் இருவரும் வீட்டிற்கு தூங்க சென்ற நிலையில், நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்காமல் இருந்து உள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த தொப்பூர் போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.