‘வைகைச் செல்வனை’ கேள்வி கேட்ட முதியவர் : அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்!

 

‘வைகைச் செல்வனை’ கேள்வி கேட்ட முதியவர் : அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியானது. அதன் படி, அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுகவின் வைகைச் செல்வன் போட்டியிடுகிறார். கடந்த 2011ம் ஆண்டு அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார். அப்போது அவர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்பதால், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் அவரை புறக்கணித்தனர்.

‘வைகைச் செல்வனை’ கேள்வி கேட்ட முதியவர் : அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்!

அருப்புக்கோட்டையில் தோல்வியுற்ற பிறகு அந்த பக்கம் வைகைச் செல்வன் எட்டிக் கூட பார்க்கவில்லையாம். இத்தகைய சூழலில், வரும் தேர்தலில் அருப்புக்கோட்டை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் வைகை செல்வன் அங்கிருக்கும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். பின்னர், மேடையில் நின்று கொண்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், நீங்கள் அமைச்சராக இருந்த போது எங்களுக்கு என்ன செய்தீர்கள்? கடந்த சில வருடங்களாக இந்த பக்கம் எட்டி பார்க்காத நீங்கள் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி கேட்டார். அதைக் கேட்டு கடுப்பான அதிமுக நிர்வாகிகள், அவரை கடுமையாக அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.