காதலில் விழுந்த அக்கா -கூட சென்ற தங்கை -காதலனால் இருவருக்கும் நடந்த சோகம்.

 

காதலில் விழுந்த அக்கா -கூட சென்ற தங்கை -காதலனால் இருவருக்கும் நடந்த சோகம்.


இரு சகோதரிகளை ஒரு காதலன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற விவகாரம் பஞ்சாபில் புயலை உண்டாகியுள்ளது .


காதலில் விழுந்த அக்கா -கூட சென்ற தங்கை -காதலனால் இருவருக்கும் நடந்த சோகம்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் மோகாவில் உள்ள மானுகே கில் கிராமத்தில் , 30 வயதான குர்வீர் சிங் என்பவர் வசித்து வந்தார் . குர்வீரின் தந்தை இந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் , அவரது தாயார் தற்போதைய தலைவராக இருக்கிறார் .
இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் குர்மெயில் சிங் என்பவருக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள் .அவர்களில் 24 வயதாகும் பெரிய மகளை அந்த குருவீர் சிங் காதலித்து வந்தார் .அதனால் இருவரின் காதலும் அவரின் 17 வயதான தங்கைக்கு தெரியும் .இருவரும் ஒரு கல்லூரியில் ஒன்றாக படிக்கிறார்கள் .இந்நிலையில் கடந்த வாரம் அந்த குர்வீர் சிங்குக்கும் அவரின் காதலிக்கும் பண விஷயமாக தகராறு நடந்துள்ளது அப்போது அவரின் தங்கையும் அங்கு இருந்துள்ளார் .இந்த தகராரில் அந்த குருவீர் அந்த இரண்டு பெண்களையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார் .
இந்த கொலை வழக்கு அந்த பஞ்சாபில் மிகபெரிய புயலை உண்டாக்கியுள்ளது .அதனால் இந்த கொலை பற்றியும் இதற்கு காரணமான அந்த குருவீர் சிங்கையும் உடனே கைது செய்யுமாறு இறந்த பெண்களின் தந்தை போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார் .மேலும் அவர் கூறுகையில் ,அந்த வாலிபர் தனது மகள்களை தொடர்ந்து கொடுமை படுத்தியதாகவும் ,இது பற்றி பஞ்சாயத்தில் கூறியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார் .போலீசார் அவர் சுட்ட துப்பாக்கியை கைப்பற்றி, அந்த கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தனர் .

காதலில் விழுந்த அக்கா -கூட சென்ற தங்கை -காதலனால் இருவருக்கும் நடந்த சோகம்.