கான்பூரில் 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை!

 

கான்பூரில் 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை!

கான்பூரில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.

கான்பூரில் 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை!

ரவுடிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், டிஜிபி அவாஸ்திக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.