EIA அவகாசம் நீட்டிப்புக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

 

EIA அவகாசம் நீட்டிப்புக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்தாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி எல்லோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

EIA அவகாசம் நீட்டிப்புக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் எழுந்த வழக்கில், ஆகஸ்ட் 11 வரை அறிக்கை மீதான கருத்திக்கேட்புக்கு அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.