‘ரவுடிகளுக்காக போலீசாருடன் மோதிய திமுக எம்.எல்.ஏ’ – அடியாட்களுடன் காவல்நிலையத்தில் அராஜகம்!

 

‘ரவுடிகளுக்காக போலீசாருடன் மோதிய திமுக எம்.எல்.ஏ’ –  அடியாட்களுடன் காவல்நிலையத்தில் அராஜகம்!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் ரவுடிகள், பொதுமக்களை தாக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த போலீசார் அங்கு சென்ற போது, அவர்களையும் ரவுடிகள் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

‘ரவுடிகளுக்காக போலீசாருடன் மோதிய திமுக எம்.எல்.ஏ’ –  அடியாட்களுடன் காவல்நிலையத்தில் அராஜகம்!

சற்று நேரத்திலேயே காவல்நிலையத்துக்கு அடியாட்களுடன் சென்ற திமுக எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், ரவுடிகளை விடுவிக்கும் படி போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவிக்கவே ரவிச்சந்திரன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து செல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அப்போது எங்கள் வேலையை தான் நாங்கள் பார்க்கிறோம் என போலீசார் தெரிவிக்க, அந்த இடமே களேபரமாக மாறியுள்ளது.

‘ரவுடிகளுக்காக போலீசாருடன் மோதிய திமுக எம்.எல்.ஏ’ –  அடியாட்களுடன் காவல்நிலையத்தில் அராஜகம்!

ரவுடிகளுக்கு வக்காளத்து வாங்க திமுக எம்.எல்.ஏ வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், காவல்நிலையத்துக்கு வந்து அவரிடம் முறையிட்டுள்ளனர். கஞ்சா விற்கும் ரவுடிகளுக்கு ரவுடிகளுக்கு ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியவுடன், ரவிச்சந்திரனுடன் வந்த அடியாட்கள் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். அதற்கு சற்றும் பயப்படாத பொதுமக்கள், ஆட்சிக்கு வந்தால் இன்னும் மக்களை என்ன பாடு படுத்துவீர்கள் என ரவிச்சந்திரனை விமர்சித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.