தனியார் கல்லூரிகளில் 3 தவணையாக கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு

 

தனியார் கல்லூரிகளில் 3 தவணையாக கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ அல்லது பெற்றோர்களையோ வற்புறுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், நடப்பாண்டிற்கான மீதமுள்ள கல்விக் கட்டணத்தையோ, அல்லது அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ செலுத்துமாறு கல்வி நிறுவனங்கள் வற்புறுத்தக் கூடாது என்றும் இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனியார் கல்லூரிகளில் 3 தவணையாக கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு தனியார்ப் பள்ளி-கல்வி கூட்டமைப்புகள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் கல்லூரிகளில் தவணையாகக் கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர், 2021 ஏப்ரல் என 3 தவணையாகக் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என்று பதில் மனு அளித்துள்ளது.