திருக்குறள் குறித்து பிரதமர் கூறியது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை: முதல்வர் பழனிசாமி
திருக்குறள் குறித்து பிரதமர் மோடியின் கருத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் மாலன் வாரப் பத்திரிகை ஒன்றில் பிரதமர் மோடியின் திருக்குறள் பற்று தொடர்பாக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுறுவர் என நம்புகிறேன்”எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது. இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், (1/2)
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 16, 2020
இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது. இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.