என்றும் நான் என் அம்மாவின் மாணவன்: முதல்வர் பழனிசாமி

 

என்றும் நான் என் அம்மாவின் மாணவன்: முதல்வர் பழனிசாமி

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக விமர்சையாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தின விழா, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மத்திய, மாநில் அரசுகள் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை நல்லாசிரியர் விருதுக்கு 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ள விழாவில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநில அரசும் நடத்தும் விழா ரத்து செய்யப்பட்டதால் மாவட்ட வாரியாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இன்று ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆசிரியர் தினத்தில், என்றும் எனக்கு அரசியல் ஆசானாய் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.