இது மாண்புமிகு அம்மா மீது ஆணை! முதல்வர் பழனிசாமியின் அதிரடி சபதம்

 

இது மாண்புமிகு அம்மா மீது ஆணை! முதல்வர் பழனிசாமியின் அதிரடி சபதம்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் அனைவரும் மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றவேண்டுமென ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்பேரில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெரு மக்கள் தீபம் ஏற்றி அதிமுகவை காப்பேன் என உறுதிமொழி எடுக்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்று கோட்டையில் அதிமுக கொடியை பறக்கவைக்க உறுதிமொழி ஏற்கவேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

இது மாண்புமிகு அம்மா மீது ஆணை! முதல்வர் பழனிசாமியின் அதிரடி சபதம்

இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் விளக்கு ஏற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும்,மக்களுக்கான நம் அதிமுக இயக்கத்தையும் காப்பேன்! இது மாண்புமிகு அம்மா மீது ஆணை!” என உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக “தரணி போற்றும் அன்னபூரணி,தமிழர்களின் தார்மீக உரிமை மீட்ட சரித்திர தலைவியின் வழியில் எதிரிகளையும்,துரோகிகளையும் விரட்டியடித்து,மக்களையும்,அதிமுகவையும் உயிர்மூச்சு உள்ளவரை காப்பேன் என மாலை 6 மணிக்கு இல்லங்களில் தீபமேற்றி உறுதியேற்போம். இது அம்மா மீது ஆணை!” என ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.