நான் விட்டு சென்றதை நீங்க செய்யனும் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

 

நான் விட்டு சென்றதை நீங்க செய்யனும் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

திருக்கோவில்களில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் விட்டு சென்றதை நீங்க செய்யனும் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர மாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருக்கோவில் களில் பணியாற்ற 40 ஆயிரம் தற்காலிக பணியாளர் பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டிருந்தேன். ஆனால் தேர்தல் வந்து விட்டதால் இப்பணி நிறைவடையவில்லை. கோவில்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களது குடும்பங்களில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே அறிவித்தவாறு தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் கோவில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.