தேர்தலில் செலவு செய்தது நான்; 234 தொகுதிகளிலும் உழைத்தது நான்!- ஈபிஎஸ்

 

தேர்தலில் செலவு செய்தது நான்; 234 தொகுதிகளிலும் உழைத்தது நான்!- ஈபிஎஸ்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இந்த நிலையில், 16-வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் என்ற அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிக்கப்பட்டது.

தேர்தலில் செலவு செய்தது நான்; 234 தொகுதிகளிலும் உழைத்தது நான்!- ஈபிஎஸ்

கூட்டத்திற்கிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தலில் செலவு செய்தது நான். 234 தொகுதிகளிலும் உழைத்தது நான். எப்படி பதவியை விட்டுக் கொடுப்பது?. கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை பெற்றுள்ளோம்” என தெரிவித்தார்.