உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார்! ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி
புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெ. மரணம் தொடர்பாக நான் வழக்கு போட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார். ஒரு தலைவன் என்றால் அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும், குறுக்கு வழியில் அணுகக்கூடாது.
மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு. காவிரி குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த அடிக்கல் நாட்டியுள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாட்டிலேயே அதிக இழப்பீடு பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு. அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். விவசாய கடன்கள் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை உடைய விவசாயி நான். திமுக ஒரு அராஜக கட்சி. அவர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைய வ்ண்டும், ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுவாங்கி ஸ்டாலின் நாடகமாடுகிறார்” என பேசினார்.உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார்.