உங்களில் ஒருவர் எம்எல்ஏ, எம்பி, ஏன் முதல்வராக கூட மாறலாம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

உங்களில் ஒருவர் எம்எல்ஏ, எம்பி, ஏன் முதல்வராக கூட மாறலாம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ஜி.வி மகால் திருமண மண்டபத்தில், மாவட்ட அதிமுக பாசறை தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உங்களில் ஒருவர் எம்எல்ஏ, எம்பி, ஏன் முதல்வராக கூட மாறலாம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாசறை மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது, எதிர்காலத்தில் ஆள பிறந்தவர்கள் இளஞ்சிங்கங்கள், பாசறை, தொழில் நுட்ப பிரிவு இளைஞர்கள் மூலமாக அதிமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. எதிர்காலம் வலிமையாகவும், செழுமையாகவும் இருக்க உங்களை போன்ற இளைஞர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். எதிர் காலத்தில் உங்களில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஏன் முதல்வராக கூட வர வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார்.