பட்டாசு தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

 

பட்டாசு தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

விருதுநகர் மாவட்டத்தில் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரானா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் அம்மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுப்பணித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 15 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ராஜபாளையம் – ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒருங்கிணைந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு பரிசீலனை நடை பெற்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. மாவட்டத்தில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது” எனக் கூறினார்.

பட்டாசு தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா பரவலை தடுக்க கடுமையான முயற்சியை அரசு மேற்கொண்டுவருகிறது. மாவட்டத்தில் அதிகமாக காய்ச்சல் முகாம்கள் நடத்தபட்டதால் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் விருதுநகர். பொதுமுடக்கத்தின்போது பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. பட்டாசு தொழிலை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கப்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது எழுதிக் கொடுப்பதை வைத்து பேசி வருகின்றார், 7 தமிழர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு உத்தரவிட முடியாது. ஸ்டாலின் கீழ்தரமான அரசியல் செய்கிறார். அவரது அப்பா இறப்பில் கூட எனக்கு சந்தேகம் கருதுகிறது. அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம் உள்ளது என ஸ்டாலின் தான் கூறவேண்டும்”எனக் கூறினார்.