தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

 

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமரிடம் முதலமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

மோடியுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், பிரதமர் மோடி. தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு. நெல்கொள்முதல் மானியமாக நிலுவையில் உள்ள ரூ.1,321 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும்” எனக் கூறினார்.