“எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்” : தலைமை உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்!

 

“எடப்பாடி பழனிசாமி மீண்டும்  முதல்வராவார்” :  தலைமை உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்!

மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறியுள்ளார்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த மாதம் அதிமுகவுக்குள் சர்ச்சைக்குரிய விவாதம் ஒன்று எழுந்தது. அது அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான்.

“எடப்பாடி பழனிசாமி மீண்டும்  முதல்வராவார்” :  தலைமை உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்!

இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருபுறம், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருபுறம் என மல்லுக்கட்ட இதை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒன்றிணைந்து அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பொதுவெளியில் பேச கூடாது என்று உத்தரவிட்டு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

“எடப்பாடி பழனிசாமி மீண்டும்  முதல்வராவார்” :  தலைமை உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்!

இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை முதல்வர் பெற்றுள்ளார்” என்று பேட்டி அளித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்திருப்பது மீண்டும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.