‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்’ : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

 

‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டுமல்ல  தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்’ : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகளை – கட்சியை – ஆட்சியை அடமானம் வைத்து விட்டார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டுமல்ல  தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்’ : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

இந்நிலையில் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சிறப்பு காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “நான் ஒரு விவசாயி, விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி; அதிமுகவினரே இதை கேட்டால் சிரிப்பார்கள்; கொள்ளையடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்கு தகுதி வாய்ந்த ஒரு ஆள் எடப்பாடி பழனிசாமி. ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் தான் எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்;

‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டுமல்ல  தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்’ : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள், பினாமிகளுக்கு கொடுத்தவர் பழனிசாமி”எடப்பாடி பழனிசாமி அல்ல – டெண்டர் பழனிசாமி. உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்து பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை பாஜகவுக்கு அடமானம் வைத்தார்; ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியை குத்தகைக்கு விட்டார்;

‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டுமல்ல  தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்’ : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

திருட்டுத்தனம் செய்து பிடிபட்டதால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவின் கிளைக்கழகமாக மாற்றிவிட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்த்துப் போராடும் பாஜக அரசின் வேளாண் சட்டங்களை ஒரே ஒருவர் மட்டும் ஆதரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தான் விஷவாயு பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகளை – கட்சியை – ஆட்சியை அடமானம் வைத்து விட்டார்; ஒரு கொள்ளைக் கும்பல் தங்களது தலையைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டது என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; எடப்பாடி பழனிசாமி; அதிமுகவுக்கு மட்டுமல்ல – தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம்” என்றார்.