தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை புதுக்கோட்டை செல்கிறார்!

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை புதுக்கோட்டை செல்கிறார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10.20 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஐடிசி நிறுவனத்தை பார்வையிடுகிறார். பின்னர் விராலிமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைக்கும் முதல்வர் நாளை மதியம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்துவைக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை புதுக்கோட்டை செல்கிறார்!

அதன்பின் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் கொரோனா பணிகள் குறித்தும் அரசு அலுவலகர்களுடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முன்னதாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மாவட்டங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.