குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!

 

குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 10,11 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மூன்று மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்.

கொரொனா நோய்த் தொற்றல் உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கோரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று 2,511 புதிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க, ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!

இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தும் வழங்கியும், புதிய திட்டங்களை அறிவித்தும் வருகிறார். இந்நிலையில் கொரோனா கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வரும் வரும் 10,11ஆம் தேதிகளில் குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.