‘வாழும் புரட்சித் தலைவரே’ முதல்வருக்கு பிரம்மாண்ட கட்- அவுட்!

 

‘வாழும் புரட்சித் தலைவரே’ முதல்வருக்கு பிரம்மாண்ட கட்- அவுட்!

கரூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாகுபலி போல் சித்தரித்து கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

‘வாழும் புரட்சித் தலைவரே’ முதல்வருக்கு பிரம்மாண்ட கட்- அவுட்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். திருப்பூர், மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

‘வாழும் புரட்சித் தலைவரே’ முதல்வருக்கு பிரம்மாண்ட கட்- அவுட்!

இந்நிலையில் கரூர் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் உள்ள முத்துக்குமார், முதல்வர் பழனிசாமி வாழும் புரட்சித்தலைவரே… அன்னமிட்ட கை, நன்றியுடன் வணங்குகிறோம் என்ற வாசகங்களுடன் அச்சடித்து பேனர் வைத்துள்ளனர். அத்துடன் அதில், பழனிசாமி எம்ஜிஆர் போல தொப்பி, கண்ணாடியும் அணிந்திருப்பது போல அச்சடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமராவதி ஆற்றங்கரையில் எடப்பாடி பழனிசாமியை பாகுபலி போல் சித்தரித்து பிரம்மாண்ட கட் -அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.