“வெற்றிநடைபோடும் தமிழகம்”! வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் பழனிசாமி

 

“வெற்றிநடைபோடும் தமிழகம்”! வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் பழனிசாமி

“வெற்றிநடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை நாளை நாமக்கல்லில் இருந்து தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை அண்மையில் தொடங்கினார்.

இந்நிலையில், நாளை முதல் மூன்று தினங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 29ஆம் தேதியன்று நாமக்கலில் ஹனுமன் கோயிலுக்கு சென்று கோயில் வளாகத்தில் உள்ள வியாபாரிகளை சந்திக்கவுள்ளார். பிறகு லாரி மற்றும் கோழி பண்ணை தொழில்துறையினரின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். பின்னர் ராசிபுரத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு சென்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெற்றிநடைபோடும் தமிழகம்”! வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் பழனிசாமி

தொடர்ந்து திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, பின்னர் வீடு வீடாக வாக்கு சேகரிக்கவுள்ளார். இதனையடுத்து சேந்தமங்கலமும், திருச்சி மாவட்டம் துரையூரிலும் வேளாண் தொழிலாளர்களை சந்தித்து வாக்கு கேட்கவிருக்கிறார். இதைய்அடுத்து முசிறி, மணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருவெரும்பூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.