“என்னை போல செயல்படுங்கள் ஸ்டாலின்” – முன்னாள் முதல்வர் எடப்பாடி அட்வைஸ்!

 

“என்னை போல செயல்படுங்கள் ஸ்டாலின்” – முன்னாள் முதல்வர் எடப்பாடி அட்வைஸ்!

“கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு முதல்வராக இருந்தபொழுது, எனது தலைமையிலான அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. இதனால் பொதுமக்களின் ஆதரவோடு நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

“என்னை போல செயல்படுங்கள் ஸ்டாலின்” – முன்னாள் முதல்வர் எடப்பாடி அட்வைஸ்!

இக்காலகட்டத்தில் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விலையில்லா உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைகிறார்கள். அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

“என்னை போல செயல்படுங்கள் ஸ்டாலின்” – முன்னாள் முதல்வர் எடப்பாடி அட்வைஸ்!

இதனால் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலானஅரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியது போல், உடனடியாக 2,000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.