கேரள தங்க கடத்தல் : குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர்!

 

கேரள தங்க கடத்தல் : குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் அமலாக்கத் துறை நேற்று கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நியமனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என அமலாக்க துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள தங்க கடத்தல் : குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர்!

ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரித்ததில் பெரும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதில் முதல்வர் அலுவலகத்தில் ஐடி பிரிவில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

கேரள தங்க கடத்தல் : குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர்!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் ‘ஸ்பேஸ் பார்க்’ திட்டத்தில் கடந்த 2019 நவம்பரில் சேர்ந்துள்ளார். இவரது பணி நியமனம் பினராயிக்கு தெரியும் என்றும் இவர் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக தூதரக ஊழியராக பணியாற்றிவர் என்பதை முதல்வர் அறிவார் என்றும் ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார் . இதனால் இந்த வழக்கில் முதல்வர் உள்பட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.