மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற, உதவி பொறியாளர் கைது!

 

மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற, உதவி பொறியாளர் கைது!

தஞ்சை

தஞ்சை மாவட்டம் பூதலூரில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் கைதுசெய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, பூதலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது, அங்கு உதவி பொறியாளராக பணிபுரியும் தனகோடி என்பவர், மின் இணைப்பு வழங்க 9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற, உதவி பொறியாளர் கைது!

இதனை விரும்பாத ஆரோக்கியசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழங்கிய ஆலோசனைப் படி நேற்று ராசாயனம் தடவிய 9 ஆயிரம் ரூபாய் பணத்தை, மின்வாரிய உதவி பொறியாளர் தனக்கோடியிடம், அவர் வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், தனகோடியை கையும், களவுமாக கைது செய்தனர். பின்னர், அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.