பெண்களுக்கு இடை மெலிந்த உடல்வாகு தரும் வெங்காயம்!

 

பெண்களுக்கு இடை மெலிந்த உடல்வாகு தரும் வெங்காயம்!

வெங்காயம்… மிகச் சிறந்த உணவுப்பொருள் மட்டுமல்ல மருந்தாகப் பயன்படக்கூடியது. உழவுப்பணி செய்யும் தொழிலாளர்களின் நோயற்ற வாழ்வுக்கு பெரிதும் துணையாக இருப்பது இந்த வெங்காயம். ஆனால், நம்மில் பலர் அதன் பலன் பற்றி அறியாததால் அதைச் சீண்டுவதில்லை. இனியாவது பலனறிந்து பயன்படுத்துவோம்.

பெண்களுக்கு இடை மெலிந்த உடல்வாகு தரும் வெங்காயம்!வெங்காயச் சாறு:
வெங்காயம் நச்சுக்கிருமிகளைக் கொல்லவும், உடலை மெலிதாக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தைத் தணிக்கவும் பயன்படுகிறது. அத்துடன் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், கொழுப்பைக் கரைக்கவும், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்கவும் நல்ல மருந்தாகும். இப்படி பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வெங்காயத்தின் பலன் கிராமத்து மக்களுக்கு நிறையவே தெரிந்திருக்கிறது. வெங்காயம் சாப்பிட்டால் வாயில் ஒருவித வாடை வீசுமென்பதால் பலர் அதைச் சாப்பிடுவதில்லை.

பக்கவாதம் என்று சொல்லப்படும் மூளை ரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் நல்ல பலன் தரும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குடித்தால் நாளடைவில் பிரச்சினை சரியாகும். அத்துடன் வாரத்தில் மூன்று நாட்கள் வெங்காயப் பச்சடி சாப்பிடுவது மேலும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவும்.

பெண்களுக்கு இடை மெலிந்த உடல்வாகு தரும் வெங்காயம்!பச்சை வெங்காயம்:
வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி அதில் மோர் விட்டு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளித்து உப்பு கலந்து பகல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பச்சை வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவதும் சிறப்பு. இரவில் வெங்காயத்தை வேக வைத்துச் சாப்பிடுவதால் தூக்கமின்மை பிரச்சினை தீரும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் கபம் கட்டிக்கொள்வதுடன் இதயக்கோளாறுகள் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் புகையிலையில் உள்ள நிக்கோடின் நச்சுப்பொருள் ரத்தத்தை நஞ்சாக்கும். வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கு இடை மெலிந்த உடல்வாகு தரும் வெங்காயம்!
சட்னி, பச்சடி:
ரோமானிய நாட்டுப் பெண்கள் இடை சிறுத்து அழகாகக் காட்சியளிக்க வெங்காயத்தை விரும்பிச் சாப்பிடுவார்களாம். அதேபோல் நீரோ மன்னன் தன் குரல் இனிமைக்காக தினமும் வெங்காயம் சாப்பிட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்தனை சக்தி வாய்ந்தது வெங்காயம்.

வெங்காயத்தில் சாம்பார், சட்னி, பச்சடி மட்டுமல்லாமல் வடகம் செய்யலாம். பழைய சோறு, சுடு சோறு எதுவாக இருந்தாலும் வெங்காய வடகத்தை பொரித்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தமிழர்களின் உணவில் வெங்காயத்துக்கு சிறப்பிடம் உண்டு. பெரும்பாலும் சாம்பார் வெங்காயத்தையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் என்றாலும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்துக்கும் மருத்துவக்குணம் உண்டு.