நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

 

நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

நரை முடி… வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒன்று. அமேசான் காட்டில் கிடைக்கும் அரியவகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை பயன்படுத்தினால் முடி செழித்து வளரும், நரைமுடி விலகும் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படி விளம்பரம் செய்யப்படும் பெரும்பாலான பொருள்களில் உண்மைத்தன்மை இல்லை.

நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!முடி பராமரிப்பு:
இயற்கையான முறையில் கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மற்றும் சில ஊட்டச்சத்துகளால மட்டுமே இந்த முடி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். மன இறுக்கம், கவலை, தூக்கமின்மை, ஓயாத சிந்தனை, கடின உழைப்பு, மிதமிஞ்சிய ஆசைகள், வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நரை முடி வர வாய்ப்பு உள்ளது. ஆகவே, முதலில் இவற்றை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

வைட்டமின் பி, கே சத்துகள் குறைவாலும் உவர்ப்பு, காரம், புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதாலும் உப்பு நீரில் குளிப்பதாலும் தலைக்கு சரியாக எண்ணெய் தேய்த்து பராமரிக்காததாலும்கூட நரைமுடி வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, நமது வாழ்க்கை முறை, உணவு முறையில் சில ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!கடுக்காய்:
நரை முடி வராமலிருக்க சில தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் சூழலில் சில மூலிகைகள் மற்றும் இயற்கை வழிகளில் தீர்வு காணவும் வழிகள் இருக்கின்றன. தாமரைப்பூவை கசாயம் செய்து காலை, மாலை குடிப்பது நல்லதொரு தீர்வாக இருக்கும். கரிசலாங்கண்ணி, கொட்டைக்கரந்தை இலை தலா 100 கிராம் எடுத்து நன்றாக உலர்த்தி தூளாக்கி காலை மாலை அரை ஸ்பூன் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

கடுக்காய் தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய்… திரிபலா என்று சொல்லப்படும் இவற்றில் தலா 50 கிராம் எடுத்துப் பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து வெல்லம் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம். இதுவும் நரை முடி மாறுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!நெல்லிக்காய்:
நெல்லிக்காய் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வரலாம். நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தாலும் இளநரை விரைவில் மாறும்.

கரிசலாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்த கடுக்காய் நீரை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் நரை நீங்கி முடி கருமையாகும். முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வாரம் இரண்டுமுறை எண்ணெய்க் குளியல் செய்து வந்தால் இளநரை மாறும்.

இவைதவிர அன்றாட உணவில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது சிறப்பு. காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் இஞ்சிச்சாற்றுடன் அதே அளவு தேன் கலந்து குடிக்கலாம். இதுபோன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நரை முடி பிரச்சினையிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம்.