மணிப்பூர், மேகாலயா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம்

 

மணிப்பூர், மேகாலயா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம்

ஷில்லாங்: மணிப்பூர், மேகாலயா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சமீப நாட்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் மிசோரமில் தொடர்ந்து நான்கு நாட்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மணிப்பூர், மேகாலயா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.1 ரிக்டர் அளவிலும், மேகாலயாவின் துரா பகுதியில் மதியம் 12:24 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மேகாலயாவில் துராவுக்கு மேற்கே 79 கி.மீ தூரத்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.