பாகிஸ்தானின் கடும் அதிர்ச்சி தரும் நிலநடுக்கம்!
Oct 26, 2020, 13:15 IST1603698314000
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 ரிக்டர் அளவில் பதிவானது இந்த நிலநடுக்கம். சேதத்தை விளைவிக்கும் அளவுதான் என்றாலும், சேத விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்பட வில்லை.
சென்ற ஆண்டு செப்டம்பர் 24 -ம் தேதியன்று பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள வீதிக்கு விரைந்து வந்தனர். ஆயினும், வீடுகள் சரிந்தன. கட்டங்கள் இடிந்து விழுந்தன.
அந்த நிலநடுக்கத்தில் அதில் 22 பேர் உயிர் இழந்தார்கள். 700கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.
இந்தப் பாதிப்பிலிருந்து மீண்ட பாகிஸ்தான் மீண்டும் ஒரு நிலநடுக்கத்தைச் சந்தித்துள்ளது. இதில் உயிர் பலி எத்தனை என்றும் எவ்வளவு சேதம் என்பதும் இன்னும் தெரியவில்லை.