இனி இ-பாஸ் தேவையில்லை! தளர்வுகளை அறிவித்தது கர்நாடக அரசு…

 

இனி இ-பாஸ் தேவையில்லை! தளர்வுகளை அறிவித்தது கர்நாடக அரசு…

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இபாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை மாநில அரசுகள் தகர்த்தவில்லை. ஆனால், அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். அதன் படி தற்போது விண்ணப்பித்த எல்லாருக்கும் இபாஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

இனி இ-பாஸ் தேவையில்லை! தளர்வுகளை அறிவித்தது கர்நாடக அரசு…

இதனிடையே நேற்று முன் தினம் மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து புதுச்சேரியில் நேற்று முதல் இபாஸ் ரத்து செய்யப்பட்டது. அதாவது மாநிலத்திற்கு உள்ளேவும், மாநிலத்திலிருந்து வெளியே செல்லவும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. அதே போல் தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்ய வாப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு உள்ளேவும், மாநிலத்தைவிட்டு வெளியே செல்லவும் இ பாஸ் தேவையில்லை என்றும், பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோருக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை இல்லை என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.