சென்னை விமான நிலையத்தில் வழங்கப்பட்டுவந்த இ பாஸ் நடைமுறை நிறுத்தம்!

 

சென்னை விமான நிலையத்தில் வழங்கப்பட்டுவந்த இ பாஸ் நடைமுறை நிறுத்தம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன. இதனிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் வழங்கப்பட்டுவந்த இ பாஸ் நடைமுறை நிறுத்தம்!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகள் கண்டிப்பாக இ.பாஸ்பெற வேண்டும், கொரோனா சோதனை மேற்கொள்ளவேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான சேவைப்பகுதியில் உள்ள ஓய்விடத்தில், பயணிகளின் வசதிக்காக இணையவசதியுடன் கனிணி சேவை ஏற்படுத்தப்பட்டது. அங்கு சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் http://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.