இ-பாஸ் வசதி இன்றுடன் திரும்பப்பெறப்படுகிறது; சென்னை விமான நிலையம் அறிவிப்பு!
உள்நாட்டு விமான பயணிகளுக்கான இபாஸ் வசதி திரும்பப் பெறப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்றும் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்பது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், முக்கிய மற்றும் அவசர தேவைகளுக்கு கூட இ-பாஸ் எளிதில் கிடைப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதனால் மக்களுக்கு இடையூறாக இருக்கும் இபாஸ் நடைமுறையை ரத்து செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் படி கடந்த 1 ஆம் தேதி இ பாஸ் முறையை ரத்து செய்வதாகவும் பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் முதல்வர் அறிவித்தார். அதன் படி, எல்லா விமான நிலையங்களிலும் உள்நாட்டு பயணிகளுக்கு இ- நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் இ-பாஸ் நடைமுறையை திரும்பப்பெறுவதாக சென்னை விமான நிலையம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அந்த பதிவில், இன்று மாலை 6 மணியுடன் இபாஸ் நடைமுறை திரும்பப்பெறப்படுவதாகவும், பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Important Update: The TN e-Pass facility at #Chennaiairport domestic arrival stands withdrawn from 1800 hrs, today. We request all interstate passengers arriving at #Chennai to apply for TN e-Pass from the link https://t.co/TOgBHnIuu4 prior commencing the journey. @AAI_Official
— Chennai (MAA) Airport (@aaichnairport) September 18, 2020