‘புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து’.. காரணம் இது தான்!

 

‘புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து’.. காரணம் இது தான்!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட இபாஸ் முறை அமலில் இருந்து வருகிறது. இதனை நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தும், இபாஸை தகர்க்க முடியாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்த அரசு, சில தளர்வுகளை மட்டும் அளித்தது. இந்த இபாஸ் நடைமுறை புதுச்சேரியிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பாஸ் நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

‘புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து’.. காரணம் இது தான்!

அதனால், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து மற்றும் தனிநபர் செல்ல தடை விதிக்கக்கூடாது என்றும் இபாஸ் போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவு படி, புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்கள் செல்லவும், புதுச்சேரி வருவதற்கு இனி இபாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.